Posts

அச்சம் அறுப்போம்..... உச்சம் தொடுவோம்

  அச்சம் அறு ……… உச்சம் தொடு அச்சத்தின் துவக்கமே ஆதியில்தான் இயற்கையைப் புரிந்தான் இறைவழிபாடானது . செயற்கையைப் பரந்தான் அறிவியல் ஆனது நிலவினைப் புரந்தான் வானியலானது . வெளிச்சம் கண்ட மனிதன் அன்றோ வெற்றிக் கனியைப் பறிப்பான் இருட்டில் கிடக்கும் மனிதன் என்று ? அச்சத் தனலை அறுப்பான் ? அச்சம் அறுத்த கோடித் தமிழன் கதைகள் உண்டு ஆயிரம் தமிழா ! இனியும் ஏன் தாமதம் ! தமிழ் வீரம் விளைந்த வரலாற்றுப் பக்கங்களை வரிசைப்படுத்தலாம் வா ! விரைந்து வா ! பேரிகையைத் தா முழக்கு உன் முழவினை அழுத்து  தமிழ் அழிவினை   அச்சத்தை அம்மியில் அரைத்துவிட்டு கடாரம் , கலிங்கம் , மகதம் , மா இலங்கை பட்டியல் நீளும் … பக்கம் போதாது …. கைத்தலம் பற்றினான் வீரன் , சூரன் தமிழ்த் தலைவன் சோழன்   அவன் அறுத்த அச்சம் தமிழன் கண்ட உச்சம் . பாரதி சோம்பல் முறித்த அச்சம் பாரதம் கண்ட உச்சம் அந்த மீசைக் கவிஞனின் நெருப்பு வரிகளில் வெந்து கரிந்தன் வெள்ளையன் வெற்றி கண்டான் இந்தியன்   இப்படி இப்படியாய் சொல்ல ஆயிரம
Image
https://orcid.org/0000-0003-1583-7658

தமிழரின் நம்பிக்கைகள்

Image
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல . இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன . நம்பிக்கை சொற்பொருள் விளக்கம் நம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது . அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை . இரண்டு கைகள் , கால்கள் , கண்கள் , காதுகள் , ஒரு தலை , மூக்கு , வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம் . அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு , “ விசுவாசம் , ஆனை , நம்பியொப்புவிக்கப்பட்டது . உண்மை” என்றும் “சத்தியம் , நிசம் , உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்கின்றது . நம்பு என்பதற்கு “விருப்பம் , நாவல்” எற்று , நாகை , ஆசை என்றும் , “ அருச்சகம் , நம்பென்னேவல்” என்றும் , அகராதிகள் பொருள் தருகின்றன . தொல்காப்பிய்தில் “நம்பும் மேவும் நசையாகும்மே” என்று வருகின்றது . நம்பு என்ற சொல்லிற்கு ‘நசை’ அல்லது ‘விருப்பம்’ எனும் பொருளைத் தருகின்றது . நற்றிணை 327 ஆம் பாடலில் ‘நம்புதல்’ என்ற சொல்லாட்சி நம்பிக்கை என்னும் பொருளில் வந்தள்ளது . ‘ நம்பிக்க