Posts

Showing posts from 2010

ரெஸலுயூசன்(Resolution)

ரெஸலுயூசன்( Resolution) மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும் , கேமராவல் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும் , அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மாணிக்கும் காரணியாகாவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும்போதும் பிக்ஸல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்வதாயின் குறைந்த ரெஸலுயூசனுடனும் , பெரிய அளவில் அச்சிட்டுக் கொளள வேண்டுமாயின் உயர் ரெஸலுயூஸனுடனும் டிஜிடல் கேமரா கொண்டு படங்களைப் பிடிக்க வேண்டும்.. டிஜிட்டல் கேமராவால் பிடிக்கப்படும் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் பிக்ஸலும் ரெஸலுயூசனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படத்தை உருவாக்க கேமரா எடுத்துக் கொள்ளும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயின் படத்தின் தரமும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் பிக்ஸல்களின் எண்ணிக்கை மட்டுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும். டிஜிட்டல் கேமரா விளம்பரங்களில் மெகாபிக்ஸல் (Megapixel) எனும் வார்த்தை உபயோகிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கல

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

சிவப்பிரகாசர்   என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப்   புலவர். இவர் , " கவி சார்வ பெளமா" , " நன்னெறி சிவப்பிரகாசர்" , " துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான   சம்பந்தர் ,   அப்பர் , சுந்தரர் ,   மாணிக்கவாசகர்   ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் தொண்டை நாட்டின்   காஞ்சிபுரத்தில்   வேளாளர்களின்   ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர் , வேலையர் , கருணைப்பிரகாசர் , ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப்பருவத்திலேயே , குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர் , மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு   திருவண்ணாமலை   சென்று , அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள் , திருவண்ணாமலையை

நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா

Image
மயிலம் பொம்மபுர ஆதீனமும், ஸ்ரீசிவப்பிரகாசர் செந்தமிழ் உயராய்வு மைய அறக்கட்டளையும் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்  தமிழ், கலை, அறிவிய ல்  கல்லூரியும்   இணைந்து நடத்திய நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இவ்விழா நிகழ்வு மாலை 05.00 மணிக்கு பத்தொன்பதாம் பட்டம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் அவர்களின்ஆசியுரையோடு நிறைவுற்றது. கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் காலை 09.00மணியளவில் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகளின் திருவுருவப்படத்தை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்களின் வழிகாட்டுதலுடன் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊர்வலமாகக் கொண்டுவந்தனர். கல்லூரி மாணவிகள் இறைவணக்கம் பாட விழா இனிதே துவங்கியது. ஸ்ரீசிவப்பிரகார சுவாமிகளின் திருவுருவப் படத்தை கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் குமாரசிவ விசுவநாதன் அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களும், கல்லூரிப் பேராசிரி

போக்குவரத்து

சாலை நடுவே இயங்கும் வெள்ளை சமிக்கைகள் வாகன ஓட்டிக்கு வழி கொடுக்கும் துவார பாலர்கள். ஆக்ஸிஜன் தொலைத்த அவசர உலகத்தில் கரியமில வாயுவை உட்கொள்ளும் அதிசய ஜீவன்கள் பாவம் நெட்டை மரங்களென நின்று புலம்பும் வெள்ளை வைரங்கள் வெள்ளாடை எதற்கென வெகுநாள் யோசித்தேன் விளங்க வில்லை! விபரம் புரிந்தது மேலாடை கொள்ளும் மாசு இதயத்துள் படிவதைக் கணக்கெடுக்க கவர்மெண்ட் கொடுத்த குறிப்பாடை அது. சூரியக் கதிர்களோடு நீர் தோழமை கொள்ளலாம். மழையோடு நீவீர் மகிழ்ந் துறவாடலாம். மனதாரச் சொல்கிறேன் நெஞ்சில் தோன்றும் துக்கம் என் கருவிழிப் பாதையி லல்லவா கசிகிறது.

ஆர்தர் தாமஸ் காட்டன்

Image
படத்திலிருக்கும் இந்தச் சிலையை … ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா , கோதாவரி மாவட்ட கிராமங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்-நம்மூரில் அண்ணா சிலை இருப்பதைப் போல! ‘ யாரு … என்.டி.ஆர். காருவா … ஓய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டிகாருவா …?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள் … இவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்! அந்த இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘ கங்கை கொண்ட பகீரதன் ’ என்று பெயர் சூட்டி , மக்கள் அவரை மனதார பூஜிக்கிறார்கள்! அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க இவர் செய்தது … அணைகள் கட்டி , விவசாயத்துக்கான நீராதாரத்தைப் பெருக்கிக் கொடுத்ததுதான் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கண்ணாவரம் என்ற இடத்திலும் , கோதாவரியின் குறுக்கே தௌலெஸ்வரம் என்ற இடத்திலும் இவர் கட்டிய அணைகள்தான் , இன்று சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தந்து , பல லட்சம் விவசாயிகளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டுள்ளது. தமிழகத்திலும்கூட … இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்