Posts

Showing posts from March 14, 2010

என் அன்புக்கு........

காதலால் கசிந்துருகி கண்களால் முன்னுரை எழுதப்பட்டு உதடுகளால் விளக்கவுரை கொடுக்கப்பட்டு அவ்வப்போது தொகுப்புரை மொழியப்பட்டு முடிவுரை யின்றி நீ...ளும் இந்தக் காதல். இந்த முடிவுரை யற்ற காதல் கட்டுரையில் நானும் சொற்களின் தொகுப்போடு பொரு ளாகின்றேன். அவ்வப்போது சந்திப் பிழைகளில் சிக்குண்டு சங்கடப்படுவ துண்டு. வினை எச்சமாய் உள்ளபோது குறிப்புப் பொருளாய் சொல் உணர்த்தி இன்பத்துப் பாலை வழி(மொழி)வ துண்டு. சில நேரம் பண்புத் தொகை பயின்று வரும்போது மை விகுதி கெடாது மெய் விகுதி கெடுவதுண்டு! இப்படியாய் எனது காதல் கட்டுரை இந்த யுகம் உள்ளவரை என் தமிழ் உள்ளவரை நீளும்....

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி

Image
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி மயிலம் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுகள்  வணக்கம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நேற்று (13.03.2010)  நிகழ்ந்தது. 19ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்களின் ஆசியுடன் கல்லூரிச் செயலர் சிவத்திரு குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க இனிதே பயிலரங்கம் துவங்கியது. கலலூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் விருந்தினரை வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் எனும் தலைப்பில் பயிலரங்கினை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் முதுகலை மாணவர்களும் இளம் இலக்கியவியல் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறப்புவிருந்தினர்களாக ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் அவர்களும், மயிலம் ஸ்டேட் பேங்க் கிளை மேலாளர் அவர்களும் கலந்து கொண்டனர். பேராசிரியர் முனைவர் இரா.இலட்சாராமன், திரு.அ.கிருபானந்தம் திருமதி.ச.அனுராதா மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயிலரங்கில் பயன் பெற்றனர். நிறைவாக துணைப் பேராசிரியர் ம