பாரதி பாரதிதாசன்: மொழி வழித் தேசியம்
ஏ. எழில்வசந்தன் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இருபெரும் மகாகவிகள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். பாரதி தேச விடுதலைக்கான உரத்தினை தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தி தன்னை தேசியக் கவியாக வெளிப்படுத்திக் கொண்டார். பாரதிதாசனோ எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனத் தன்னை முழுக்க முழுக்க தமிழ் இனக் கவிஞனாக வெளிப்படுத்திக் கொண்டார். இருப்பினும் பாரதியும் தமிழைப் பற்றிப் பாடியுள்ளார், அதேபோலப் பாரதிதாசனும் தேசவிடுதலை வேண்டிப் பாடியுள்ளார். இவ்விருவரையும் ஒருமித்து நோக்குகையில் மொழி என்ற அளவில் இனம் சார்ந்த நிலையில் ஒத்த கருத்துடையவர்களாகவும் தேசியம் சார்ந்த நிலையில் மாறுபட்டக் கருத்துடையவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் மொழி என்பது தேச ஒற்றுமைக்கும் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் உறுதுணையாக அமையும் என்பதனை இருவரும் வேவ்வேறு நிலைகளில் நின்று தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.பாரதியும் பாரதிதாசனும் ஒப்புமைகள்பாரதியையும் பாரதிதாசனையும் பிறப்பு முதல் ஆய்வோமானால் பல ஒப்புமைகள் காணக்கிடக்கின்றன. பாரதி தனது ஆசிரியர் பணியைத் தாற்காலிகமாகத் செய்தார். பாரதிதாசனோ தம் வாழ்க்கையைத் தமிழ் ஆசிரியராகவே த