Posts

Showing posts from 2022

அச்சம் அறுப்போம்..... உச்சம் தொடுவோம்

  அச்சம் அறு ……… உச்சம் தொடு அச்சத்தின் துவக்கமே ஆதியில்தான் இயற்கையைப் புரிந்தான் இறைவழிபாடானது . செயற்கையைப் பரந்தான் அறிவியல் ஆனது நிலவினைப் புரந்தான் வானியலானது . வெளிச்சம் கண்ட மனிதன் அன்றோ வெற்றிக் கனியைப் பறிப்பான் இருட்டில் கிடக்கும் மனிதன் என்று ? அச்சத் தனலை அறுப்பான் ? அச்சம் அறுத்த கோடித் தமிழன் கதைகள் உண்டு ஆயிரம் தமிழா ! இனியும் ஏன் தாமதம் ! தமிழ் வீரம் விளைந்த வரலாற்றுப் பக்கங்களை வரிசைப்படுத்தலாம் வா ! விரைந்து வா ! பேரிகையைத் தா முழக்கு உன் முழவினை அழுத்து  தமிழ் அழிவினை   அச்சத்தை அம்மியில் அரைத்துவிட்டு கடாரம் , கலிங்கம் , மகதம் , மா இலங்கை பட்டியல் நீளும் … பக்கம் போதாது …. கைத்தலம் பற்றினான் வீரன் , சூரன் தமிழ்த் தலைவன் சோழன்   அவன் அறுத்த அச்சம் தமிழன் கண்ட உச்சம் . பாரதி சோம்பல் முறித்த அச்சம் பாரதம் கண்ட உச்சம் அந்த மீசைக் கவிஞனின் நெருப்பு வரிகளில் வெந்து கரிந்தன் வெள்ளையன் வெற்றி கண்டான் இந்தியன்   இப்படி இப்படியாய் சொல்ல ஆயிரம