ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி மயிலம்

தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுகள்


 வணக்கம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நேற்று (13.03.2010)  நிகழ்ந்தது.

19ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்களின் ஆசியுடன் கல்லூரிச் செயலர் சிவத்திரு குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க இனிதே பயிலரங்கம் துவங்கியது.

கலலூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் விருந்தினரை வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் எனும் தலைப்பில் பயிலரங்கினை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் முதுகலை மாணவர்களும் இளம் இலக்கியவியல் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறப்புவிருந்தினர்களாக ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் அவர்களும், மயிலம் ஸ்டேட் பேங்க் கிளை மேலாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் முனைவர் இரா.இலட்சாராமன், திரு.அ.கிருபானந்தம் திருமதி.ச.அனுராதா மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயிலரங்கில் பயன் பெற்றனர்.

நிறைவாக துணைப் பேராசிரியர் முனைவர் ஏ.எழில்வசந்தன் அவர்கள் நன்றியுரைக்க விழா சிறப்புற நிகழ்வுற்றது.
பங்கேற்ற மாணவிகள்



பங்கேற்ற மாணவர்கள்
 




Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)