என் அன்புக்கு........

காதலால் கசிந்துருகி
கண்களால்
முன்னுரை எழுதப்பட்டு
உதடுகளால்
விளக்கவுரை கொடுக்கப்பட்டு

அவ்வப்போது
தொகுப்புரை மொழியப்பட்டு
முடிவுரை யின்றி நீ...ளும்
இந்தக் காதல்.

இந்த முடிவுரை யற்ற
காதல் கட்டுரையில்

நானும்
சொற்களின் தொகுப்போடு
பொரு ளாகின்றேன்.

அவ்வப்போது
சந்திப் பிழைகளில்
சிக்குண்டு
சங்கடப்படுவ துண்டு.

வினை எச்சமாய்
உள்ளபோது
குறிப்புப் பொருளாய்
சொல் உணர்த்தி
இன்பத்துப் பாலை
வழி(மொழி)வ துண்டு.

சில நேரம்
பண்புத் தொகை
பயின்று வரும்போது
மை விகுதி கெடாது
மெய் விகுதி கெடுவதுண்டு!


இப்படியாய்
எனது காதல் கட்டுரை
இந்த யுகம் உள்ளவரை
என் தமிழ் உள்ளவரை
நீளும்....



Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)